states

img

அருணாச்சல பிரதேசம்: 7 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கியதாக தகவல்

அருணாச்சல பிரதேசத்தில் 7 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு  ஏற்படுகிறது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி பனிச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்குள்ள கமேங் செக்டாரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இதையடுத்து அவர்களை மீட்க ஹெலிகாப்டரில் மீட்புக் குழுவினர் சென்றுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.